Saturday, November 8, 2014

மூர்க்கத்தனமாக அணைத்து, படுக்கையில் தள்ளி முத்தமழை பொழிந்தார்

என் வயது 29; சிவந்த, அழகான எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத பையன். ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் பணியில் உள்ளேன். என் சொந்த ஊரில், என் குடும்பத்திற்கு நல்ல மதிப்பு உண்டு. இங்கு, சொந்தமாக பிளாட் வாங்கி வசித்து வருகிறேன். என் அப்பா ஆண்டிற்கு, இரண்டு, மூன்று முறை, ஒரு வாரம், பத்து நாள் வந்து செல்வார். மற்றபடி என் அம்மா, அப்பா சொந்த ஊரில் உள்ளனர். நான், வாழ்க்கை மற்றும் பணி முன்னேற்றம் காரணமாக, 30 வயது வரை திருமணத்திற்கு காத்திருக்க முடிவு செய்திருந்தேன்.
என் பக்கத்து பிளாட்டில், ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர். அந்த பெண்ணிற்கு, 25 வயது இருக்கும்; அவர் கணவருக்கு, 30 வயது இருக்கும். 2013ல் அவர் வேலை காரணமாக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அவர் போகும்போது தன் மனைவி எம்.எஸ்சி., முடித்து, பி.எட்., தபாலில் படிப்பதாகவும், படிப்பு முடிந்தவுடன் அங்கு கூட்டி செல்ல விரும்புவதாகவும் கூறினார். அந்த பெண்ணின் வேண்டுதலின்படி, மாதத்தில் ஒன்று, இரண்டு தடவை வங்கி சேவை மற்றும் இதர வெளி உதவிகள் செய்வது உண்டு. எங்கள் பகுதியில் முன் இரவு நேரத்தில், அடிக்கடி மின்சாரம் தடைப்படும். அந்த நேரத்தில் மொட்டை மாடியில் அமருவேன்; அந்த பெண்ணும் வருவார். நாங்கள் பலதடவை மணிக்கணக்கில் பலதரப்பட்ட பொது விஷயங்களை பேசுவோம். ஞாயிறு இரவும், இது போல் இரண்டு மணி நேரம் மொட்டை மாடியில் பேசுவோம்; சிலநேரம் எங்கள் பேச்சில் மற்ற வீட்டுக்காரர்களும் சேர்ந்து கொள்வர். ஒரு நாளும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியது இல்லை.
ஆறு மாதத்திற்கு முன், ஒரு நாள் மதியம், நான் வெளியில் சென்று திரும்பி என் வீட்டு கதவை திறக்கும்போது, அந்த பெண், டீ சாப்பிட கூப்பிட்டார். அவர்கள் வீட்டில் பெட் ரூமில் தான், 'ஏசி' உள்ளது. அதனால், அங்கே நாற்காலி போட்டு டீ, பிஸ்கட் கொண்டு வந்தார். நான் சாப்பிட்டு முடித்து, பேசிக்கொண்டு இருந்தபோது, சற்றும் எதிர்பாராவிதமாக என்னை மூர்க்கத்தனமாக அணைத்து, படுக்கையில் தள்ளி முத்தமழை பொழிந்தார்.
அவரின் பிடியில், நான் என்னை முழுவது மாக இழந்தேன். மேற்கண்ட நிகழ்ச்சி நடக்கும் வரை, என் சுண்டுவிரல் கூட ஒரு பெண்ணின்மீது பட்டது இல்லை. அது முதல், அவளின் பிடியிலேயே இருக்கிறேன்; அவள் எண்ணப்படியே நடக்கிறேன். இதனால், என் பணி பாதிக்கிறது; அலுவலக வேலைதிறன் குறைகிறது. இது குறித்து, அந்தப் பெண்ணிடம், இந்த தொடர்பு இருவர் நலத்திற்கும் பாதிப்பு வரும் என்றும், என் அலுவலகத்தில் பணித்திறமை குறைந்தால், முன்னேற்றம் குறையும்; என் சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்படும். மேலும், அக்கம் பக்கத்தில் நம் மதிப்பு குறையும் என, பலவாறாக எடுத்து சொன்னேன். அவள் எதையும் காதில் வாங்குவதாக இல்லை. 
அவள் கணவர் அவளுக்கு பொருத்தமானவர் இல்லை; நான்தான் அவளுக்கு முழுமையான வாழ்க்கை அளிக்க கூடியவன் என்றும், நாம் வேறு எங்காவது சென்று, வாழ்க்கை நடத்தலாம் என, தொந்தரவு செய்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தற்கொலை செய்துகொள் வதாக மிரட்டுகிறார். இதனால் ஏற்படும் மன உளைச்சலில், என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை; வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. என் பெற்றோரிடம் போனில் சரிவர பேசுவது இல்லை. அவர்களும் மிகவும் கவலைப்படுகின்றனர். இதற்கு இடையில், நான் அவளின் தேவைகளை பூர்த்தி செய்ய மறுத்தால், பிளாக்மெயில் செய்து நிறைவேற்றிக்கொள்கிறாள்.
இதனால், சில நேரம் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் வருகிறது. வீட்டை காலி செய்யலாம் என்றால், அவளுக்கு தெரியாமல் முடியாது; பணி மாற்றத்திற்கும் வழி இல்லை.
அக்கா, தயவு செய்து என்னை அவளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு நல்ல வழி சொல்லுங்கள். அதே சமயம் அவளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு, சமயோசிதமான வழிகாட்டி, இரு உயிர்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்.


அன்பு தம்பிக்கு,
பணிமுன்னேற்றத்துக்காக உன் திருமணத்தை, முப்பது வயது வரை நீ தள்ளிப்போட்டது மாபெரும் முட்டாள்தனம். பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மணமானோரே தத்தம் குழந்தைகளுடன் வசிப்பர். விதிவிலக்காக தன்னந்தனியனான நீ, சகலவசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறாய். பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தாம்பத்யம் திருப்தியாக கிடைக்காத பெண்கள் நான்கைந்துபேர் இருப்பர். அவர்களில் ஒருவர் வேலி தாண்ட துணிவார். துணியும் அந்த பெண்ணுக்கு, பொருத்தமான இரையாக நீ காணக்கிடைக்கிறாய். உன்னைப் போல, கன்னிப்பையன்கள் இரையாக கிடைப்பது, அரிதிலும் அரிதான விஷயம்.
கணவர் வெளி நாட்டுக்கு போய்விட்டார். பக்கத்து பிளாட்டில், அழகான, எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத பையன் இருக்கிறான். பையன் மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜக்ட்ஸ் ஆக பேசுகிறான். அவனுடன் பேசிபேசி, அவனுக்கு இணக்கமான தோழி ஆகி விட்டோம். அவன் முதலில் தன் ஆசையை வெளிக்காட்டட் டும் என, பலநாள் காத்திருந்தாகி விட்டது. கடைசி உபாயமாக, நாம் அவன் மீது பாய்ந்து இரை எடுப்போம் என, துணிந்து விட்டாள்.
பக்கத்து பிளாட்டில் ஒரு எண்பது வயது கிழவி இருந்திருந்தால் அவளுடன் தினம் இரண்டு மணிநேரம் ஊர்கதை, உலகத்து கதை பேசியிருப்பாயா? மாட்டாய். உன் ஆழ்மனம் அவளது அருகாமையை விரும்பி இருக்கிறது. அவளை சகலவிதமாயும், வசீகரிக்க விரும்பியுள்ளாய். நீ அவளுக்கும், அவள் உனக்கும் பரஸ்பரம் தூண்டில் போட்டுள்ளீர்கள். இருவருமே எதிர்எதிர் தூண்டில்களில் சிக்கிக் கொண்டீர்கள். உறவுக்கு பின், நீ அவளை முழுக்க முழுக்க குற்றம் சாட்டுவது நியாயமற்ற செயல்.
பசியோடு இருந்தவளுக்கு விருந்து படைத்து விட்டாய். சாப்பிட்ட ருசி, நாக்கிலேயே தங்கியிருக்கும். மீண்டும் மீண்டும் விருந்துண்ணவும், விருந்து தனக்கே தனக்கு மட்டும் பரிமாறபடவும் ஆவல் கொள்கிறாள். வழியில் போன எபோலா வைரசை எடுத்து, மடியில் இட்டுக் கொண்ட கதைதான் உன் கதை. திகட்ட திகட்ட அதிரடியான தாம்பத்யம் கிடைத்த பின், மனமும், உடலும் ஒரு மந்தநிலையிலேயே திளைத்து கிடக்கும். விளைவு, பணி பாதிப்படையும், உணவு பழக்கவழக்கம் மாறும்; உறவுமுறை பேணல் தடுமாறும், அத்தனையும் உனக்கு நடக்கிறது.
பிளாட்டை ஒரே இரவில் காலி செய்து, 
20 கி.மீ., தூரத்தில் ஏதாவது ஒரு பிளாட்டுக்கு வாடகைக்கு போ. உன் பிளாட்டை வாடகைக்கு விட்டு விடு. வெளிநாட்டில் இருக்கும் அவளது கணவனுக்கு, பெயரில்லாத கடிதம் எழுது. உன் மனைவி தவறு செய்து கொண்டிருக்கிறாள். உடனே இந்தியா திரும்பு, அல்லது அவளை அழைத்து போய்விடு என, யோசனை கூறு. இந்த கள்ளஉறவின் பாதகங்களை முழுமையாக விளக்கி, அந்த பெண்ணுக்கு கடிதம் எழுது. உருக்கமான பிரியா விடையாய் அமையட்டும் உன் கடிதம்.
பதினைந்து நாள் அல்லது ஒரு யமாதம் விடுமுறை போட்டுவிட்டு, பெற்றோருடன் போய் தங்கு. பெற்றோரை போர்க்கால அவசரமாய் வரன் பார்க்கச் சொல்லி, திருமணம் செய்து கொள்.
வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப் போகும் நீ, தற்கொலை பற்றி யோசிக்கலாமா? கள்ளக்காதலில் கிடைத்த உறவையும், மனைவி மூலம் கிடைக்கும் உறவையும் ஒப்பிட்டு பார்க்காதே. திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம். மாங்காய் திருடியதற்கு வழங்கப்படும் தண்டனையை நினைத்தால் ருசி உணர்வு மட்டுப்படும். உன் உன்னதமான திருமண வாழ்வுக்கு, 'அட்வான்ஸ' வாழ்த்துகள்.
என்றென்றும் தாய்மையுடன் 
.

10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம்

சென்னை:சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். "செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தவர் செகாநாத், 25. இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர். அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்.பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த சித்திஷ், 32 என்ற வாலிபரை, சில ஆண்டுகளுக்கு முன் செகாநாத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. செகாநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரிடம் இருந்து சித்திஷ் விவகாரத்து பெற்றார்.

யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத், விபசாரக் கும்பலிடம் சிக்கினார். பத்தனம் திட்டா பகுதியில் ஹரி என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் 6 மாதம் வாழ்ந்தார். அவரது வீட்டில் "டிவிடி பிளேயர்', நகையைத் திருடி தலைமறைவானார். திருச்சூரை சேர்ந்த பிஜு என்ற ஊனமுற்ற வாலிபரைத் திருமணம் செய்த செகாநாத், அவருடன் ஒரு வாரம் வாழ்க்கை நடத்தி விட்டு எஸ்கேப் ஆனார். ஏறக்குறைய கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்திய செகாநாத், தமிழகத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவர்களிடம், தான் ஒரு அனாதை என்று பேசி வந்தார்.செகாநாத்துடன் கடலை போடும் வாலிபர்களிடம், திடீரென காதலிப்பதாகக் கூறி, அவர்களிடம் பணம் கறந்து, திருமணம் வரை சென்றுள்ளார். ஒரு சிலருடன் முதல் இரவை முடித்ததும், எஸ்கேப் ஆகியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செகாநாத்திடம் ஏமாந்த திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த சரவணன் மற்றும் தி.நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் விவரம்:வழக்கறிஞருக்குப் படிப்பதாகக் கூறிய செகாநாத், மேற்படிப்புக்கு பணம் தேவை என கூறினார். எங்களைக் காதலிப்பதாகக் கூறியதால், வருங்கால மனைவி என நினைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்தோம். எங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மொபைல் எண்ணை மாற்றி விட்டு, தலைமறைவாகி விட்டார். அவர், எங்களைப் போன்று பல வாலிபர்களை ஏமாற்றி, திருமணம் செய்து நடுத்தெருவில் விட்டுச் சென்று விட்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட 6 மொழிகளில் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க 
வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தனர். மூன்று வாலிபர்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க, அடையாறு உதவி கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, நேற்று பிற்பகல் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு போரூரை சேர்ந்த மணிகண்டன், 28, புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, 28, ஆகியோர் திருமண போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்துடன் வந்தனர். அவர்களையும் செகாநாத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.
"நான் அவள் இல்லை':போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த மணிகண்டன் கூறியதாவது:தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த செகாநாத், 25 என்னிடம் மொபைல் போனில் அடிக்கடி பேசி காதலிப்பதாகக் கூறினார். வீட்டிற்கு தெரியாமல் நாங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம்.எனது பெற்றோருக்குத் தெரிய வந்ததும், கடந்த 2011 ல், எங்களுக்கு குன்றத்தூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னுடன் 2 மாதம் தான் வாழ்ந்தார்.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவதால், வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை என தெரிவித்தார். சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு பின்புறமுள்ள மகளிர் விடுதியில் செகாநாத்தை சேர்த்து விட்டேன்.வாரம் ஒரு முறை சென்று அவரைப் பார்த்து வந்தேன். செகாநாத் வேறு சில ஆண்களுடன் பழகும் தகவல் எனக்குக் கிடைத்தது. அது பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் அவள் இல்லை' என மறுத்தார்.ஒரு கட்டத்தில் என்னை விட்டு முழுமையாக விலகி விட்டார். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என போலீசில் புகார் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தேன். பத்திரிகையில் செகாநாத் விவகாரம் வெளி வந்ததால், என்னைப் போன்று வேறு யாரும் இனிமேல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புகார்கொடுத்துள்ளேன். செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார். 4 சவரன், 1.85 லட்சம் ரூபாய் அவருக்காக செலவு செய்துள்ளேன். இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.

ஏமாந்த கால்பந்து வீரர்:போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2006ம் ஆண்டு செகாநாத்தை சந்தித்தேன். பணம் பெறும் பிரிவில் இருந்தார். என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு அடிக்கடி பேசினார். என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நான் முதலில் சம்மதிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினார். கால்பந்து வீரரான நான், விளையாட்டில் கவனம் செலுத்தியதால், அவரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.இந்தாண்டு ஜனவரி மாதம் டூவீலரில் சென்ற செகாநாத்தை எதேச்சையாக சந்தித்தேன். என்னிடம் அவர், "உனக்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்யா விட்டால் உயிரை விட்டு விடுவேன்' எனக்கூறி, அவரது கையில் கத்தியால் கீறிக் கொண்டார்.அதன் பிறகு தான் அவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். புளியந்தோப்பில் உள்ள எனது வீட்டில் என்னுடன் 5 மாதம் வாழ்ந்தார்.கணவன், மனைவியாக அன்யோன்யமாக வாழ்ந்தோம். அசைவ 
Advertisement
உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். மொத்தத்தில் அவர் மீது சந்தேகமே வரவில்லை. ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். திருமணமான பெண்கள் இளம் வயதில் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து நானும், அவரது ஆசைகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்தேன். நான் குடியிருந்த தெருவிற்கு அருகேயுள்ள தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்.அவருக்கும், செகாநாத்துக்கும் கடந்த 2006 ல் திருமணம் நடந்த தகவல் எனக்கு கிடைத்தது. புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சுரேஷ், புகார் கொடுத்தார். மகளிர் போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த செகாநாத், "எனது கணவர் பிரசன்னா தான். சுரேஷ் என்பவரை யாரென்றே தெரியாது' எனக்கூறினார். அதிர்ச்சியடைந்த சுரேஷ், செகாநாத்திடம், "நமக்குத் திருமணம் நடந்த பிறகு, வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசித்ததை மறந்து விட்டாயா. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டும் வரை குடிசை வீட்டில் இருந்தபோது, ஏற்பட்ட தீ விபத்தில் நம் திருமண போட்டோக்கள் எரிந்து விட்டன' என கூறினார்.அப்போது மூன்று பேரிடமும் எழுதி வாங்கிய புளியந்தோப்பு மகளிர் போலீசார், செகாநாத்தை எச்சரித்து அனுப்பினர். வீட்டில் இருக்க முடியாது என கூறி வெளியேறிய செகாநாத், மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். திடீரென ஒரு நாள் வந்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என, கூறினார்.செகாநாத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தபோது தான், அவருக்குப் பல வாலிபர்களுடன் திருமணம் நடந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. அவரை உண்மையாகக் காதலித்த என்னை ஏமாற்றி விட்டார். அவருக்காக 1.50 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். இனிமேல், அவர் அப்பாவி வாலிபர்களை ஏமாற்றாத வகையில் போலீசாரின் நடவடிக்கை இருக்க வேண்டும். செகாநாத் மீது திருவொற்றியூர், புளியந்தோப்பு, வேப்பேரி, வேளச்சேரி உட்பட சென்னை நகரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அப்புகார் மனுக்களை அலட்சியப்படுத்தாமல் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை திசை மாறி இருக்காது.இவ்வாறு, பிரசன்னா கண் கலங்கினார்.

பார் கவுன்சிலில் செகாநாத் மீது புகார்:திருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம், வழக்கறிஞருக்கு படிப்பதாகக் கூறி பணத்தை செகாநாத் கறந்துள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்த சரவணன், அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை ஐகோர்ட் பார் கவுன்சிலில், "வழக்கறிஞர் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் செகாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் கொடுத்துள்ளார்.

கமிஷனர் திரிபாதி அதிரடி காட்டுவாரா?சென்னை நகரில் பல போலீஸ் நிலையங்களில் மோசடி பெண் செகாநாத் மீது புகார்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. செகாநாத் மீது புகார் கொடுக்கச் சென்ற வாலிபர்களிடம் போலீசார், "அப்பெண்ணை நாங்கள் எங்கே போய் தேடுவோம். நீங்கள் பிடித்துக் கொடுங்கள். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறி தட்டிக் கழித்துள்ளனர். செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர். பல்வேறு போலீஸ் நிலையத்தில் உள்ள புகார் மனுக்களை எல்லாம், ஒன்றாகச் சேர்த்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தை கணவரிடம் படாதபாடு பட்டேன்

என் வயது 42; சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், சொந்த அத்தை எடுத்து வளர்த்தாள். 13 வயதில் பெரியவளாகி, அத்தை கணவரிடம் படாதபாடு பட்டேன். சிறுமி என்று கூட பார்க்காமல், தன் காம இச்சையை அடிக்கடி தீர்த்துக் கொண்டார் மாமா. இது அத்தைக்கு தெரியவர, உடனே திருமணம் செய்து வைத்துவிட்டார். 
கணவர் வெளிநாட்டில் இருந்தார்; ரொம்ப வசதியானவர். திருமணம் ஆகும் போது அவருக்கு வயது, 24. எங்களுக்கு ஒரு பையன், இரண்டு பெண் என, மூன்று குழந்தைகள் பிறந்தனர். தற்போது, இரண்டு பெண்ணுக்கும் வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டோம். 
பையனுக்கு போன வருடம் திருமணம் ஆனது. பையன் தான் மூத்தவன்; 28 வயது ஆகிறது. வங்கி ஒன்றில் வேலை செய்கிறான். மருமகளும், அதே வங்கியில் தான் வேலை பார்க்கிறாள். ஒரே ஜாதிதான்; பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம். என் கணவர் இன்னும் வெளிநாட்டில் தான் வேலை செய்கிறார். எனக்கு துணை, பையனும், மருமகளும் தான். 
என் மருமகளின் அண்ணனுக்கு வயது 32. இன்னும் திருமணம் ஆகவில்லை; பெண் பார்த்து வருகின்றனர். அடிக்கடி, தங்கையை பார்க்க எங்கள் வீட்டிற்கு வருவார். அவனிடம் ஏதேச்சையாக பழகிய பழக்கம், என்னிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பையனும், மருமகளும் வேலைக்கு சென்றிருக்கும் சமயங்களில் நாங்கள் தனிமையில் பேசிக் கொண்டிருப்போம். 
இது நாளடைவில், எங்களுக்கு ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்த, ஒரு நாள் உடலளவில் இணைந்து விட்டோம். இப்போது, அவரை விட்டு பிரிய எனக்கு விருப்பம் இல்லை. வாரத்தில், இரண்டு நாட்களாவது நாங்கள் இணைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில், இருவருமே இருக்கிறோம். அவரும், இப்போது திருமணம் வேண்டாம் என, வீட்டில் சொல்லி வருகிறார். எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 
மகனுக்கும், மருமகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தால் காறித் துப்பிவிடுவர். ஒளிவு மறைவுடன் எத்தனை நாள்தான் தவறு செய்ய முடியும்... ஒரு நாள் மாட்டிவிடுவோம் என எடுத்து சொல்லியும், அந்த பையன் கேட்பதில்லை. நான் இந்த நிலைமையில் என்ன செய்வது அம்மா... இதிலிருந்து நான் விடுபட முடியாமல் தவிக்கிறேன். நீங்கள் தான் எனக்கு நல்ல ஒரு யோசனை சொல்ல வேண்டும். உங்களின் யோசனைக்காக காத்திருக்கிறேன். 
 இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு,
சிறுவயதிலேயே காமத் தீயால் சூடுபட்டவளான நீ, நல்லவளாக இருந்திருந்தால், உனக்கு நேர்ந்த அநீதியும், வலியும், வேதனையும் சாகும் வரை மறந்திருக்காது. உனக்கு கிடைத்த வாழ்க்கையை தங்கமாக மதித்திருப்பாய்; உன் கணவனுக்கு மனதாலும் துரோகம் செய்ய நினைத்திருக்க மாட்டாய்.
மகளே...மனிதர்கள் யாராய் இருந்தாலும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்தும், தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்தும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அமைதியான, நிறைவான, சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
உலகம் அறியாத, எதிர்க்க துணிவில்லாத அந்த சிறுவயதில் தான், இன்னதென்று தெரியாமல் சாக்கடையில் உழன்றாய்; அதற்கு பின்பும் உனக்கு ஒரு அமைதியான, கவுரவமான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றால், நீ உன் கணவனுக்கும், கடவுளுக்கும் எத்தனை விசுவாசமாய் இருந்திருக்க வேண்டும்?
வளர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாய் நீ. அதை மறந்து, இந்த வயதிலும் நம்மை விட சிறுபையன் நம் மேல் மையல் கொண்டு மயங்கிக் கிடக்கிறானே என்ற மிதப்பில், சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல், வாரத்தில் இரண்டு நாளாவது உறவு வேண்டும் என்கிறாய். உன்னை நம்பி, தன் உற்றார், உறவினர், நண்பர், சந்தோஷம் அத்தனையும் துறந்து, கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உனக்காக உழைத்துக் கொட்ட சென்றிருக்கிறானே... உன் கணவன், அவனுக்கு நீ செய்யும் நன்றிக் கடன் இதுதானா?
உனக்குள் அடக்க முடியாத அளவுக்கு காமம் பீறிட்டு எழுகிறது என்றால், உன் நிலையை உன் கணவனுக்கு விளக்கி, ஒன்று நீ அவனுடன் அவன் இருப்பிடத்திற்கு சென்றிருக்க வேண்டும்; இல்லை, உன் கணவனை வேலையை விட்டு வா, இருப்பதை வைத்து வாழ்வோம் என்று வரவழைத்திருக்க வேண்டும். அதைவிட்டு, மருமகளின் அண்ணன் வந்தான், தனிமையில் பேசினோம், கிளர்ச்சியாக இருந்தது, தப்பு செய்தோம். அவனை விட்டு பிரிய முடியவில்லை என, உன் தவறுக்கு நொண்டிச் சாக்கு கூறுகிறாய். தவறுகளை நீ தெரியாமல் செய்பவள் அல்ல; அதன் விளைவுகளை தெரிந்தே செய்யும் குணம் கொண்டவள்.
எத்தனை வயதானால் என்ன...பெண் என்பவள், வெறும் காமத்திற்கு உரிய இச்சைப் பண்டம் என்பதை, உன்னைப் போன்ற பெண்கள் தான், ஆண்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
மகளே... காமம் என்பது சுடர் விட்டு எரியும் நெருப்பு; அதில் எணணெயை ஊற்றிக் கொண்டே, அணைக்க நினைத்தால் மேலும் மேலும் பற்றி எரியத்தான் செய்யுமே தவிர, ஒரு நாளும் குளிர்ந்து போகாது. அதனால், முதலில் மனதை அடக்கு; முறையற்ற காமம், உன்னையும் அழித்து, உன்னைச் சார்ந்தோரையும் நிம்மதி இழக்க வைக்கும்.
'வேட்கை வெறியின் விளைவாய் ஏற்படுவது சினமும், மனக்குழப்பமும் தான். மனக் குழப்பத்தால் நினைவை இழப்பதும், அந்நினைவை இழப்பதனால் கடமை மறக்கடிக்கப்பட்டு, புத்தி நாசமடைந்து, மனிதனை அழிவுக்கு இட்டுச் செல்கிறது. இந்த வேட்கை வெறியானது, கடலலை மேல் காற்று ஒரு தோணியை அடித்துச் செல்வதைப் போல மனிதனின் அறிவையே அடித்துச் சென்று விடுகிறது' என்கிறது பகவத் கீதை.
மூன்று சம்பந்தம் எடுத்த நீ, தனி மனுஷி அல்ல; மனம் போனபடி வாழ! உன் ஒவ்வொரு நல்ல, கெட்ட செயல்களின் பிரதிபலிப்பு உன் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடாதே; உன் கள்ள உறவால், கவுரவத்தை கெடுத்துக் கொள்ளாதே!
'இன்பத்திலும், துன்பத்திலும் பிரிய மாட்டேன்; எப்போதும் விசுவாசமாக இருப்பேன்...' என, அக்னியை வணங்கித்தான் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்திற்குள் நுழைகின்றனர். அந்த சத்தியத்திற்கு விசுவாசமாக இருக்கப்பார். ஒருத்தரின் தாலியை சுமந்து கொண்டு, இன்னொருவனை உல்லாசிக்காமல், உன் கள்ளக் காதலனுக்கு உன் வீட்டின் கதவை மட்டுமல்ல, உன் மனக் கதவையும் தாள் போட்டு விடு. உன் உடல், மனநிலையை விளக்கி, வெளிநாட்டிலிருந்து உன் கணவனை வரவழைத்து, மிச்சக் காலத்தை மன அமைதியுடன், சந்தோஷமாக வாழ்!
— என்றும் தாய்மையுடன்