Tuesday, August 20, 2013

கற்பைக் 'குறி'வைத்த சித்தர்

ராத்திரி பூஜைன்னா அப்படித்தான்!
கற்பைக் 'குறி'வைத்த சித்தர்
பெற்ற மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய், பெண் களை விபசாரத் தொழி லுக்குப் பழக்கிய போலி சித்தர், இவர்களுக்கு ஆள் பிடித்துக்கொடுத்த கும்பல், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ்... என்று அத்தனையும் வெளிச் சத்துக்கு வந்துள்ளது. அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் சமூகத்தின் மீதான அச்சத்தையும் அருவருப்பையும் அதிகப்படுத்தி உள்ளது இந்தச் சம்பவம். பெற்ற தாயால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள விவரங்கள் பதைபதைக்க வைக்கின்றன.   
''என் பெயர் அமுதா. என் அம்மா பெயர் வசந்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது அப்பா மாரியப்பன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் அம்மாவுக்கு விபசாரம்தான் முழு நேரத் தொழில். அவரைத் தேடி நிறைய ஆண்கள், வீட்டுக்கு வருவார்கள். எங்கள் வீட்டில் ஒரே அறைதான். அங்கே நான் இருப்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் என் அம்மா, வீட்டுக்கு வரும் ஆண்களுடன் படுத்திருப்பார். இதை நான் தினமும் பார்ப்பேன். அதனாலேயே என் கவனம் படிப்பில் இருந்து சிதறியது.
எங்கள் பகுதியில் அறவழிச் சித்தர் என்ற குறி சொல்லும் சாமியார் இருந்தார். என் அம்மா அவரைப் பார்க்க அடிக்கடி போவார். 'உனக்கு நல்ல படிப்பு வர ராத்திரி பூஜை பண்ணணும்னு சித்தர் சொல்லிருக்கிறார்’ என்று, அம்மா ஒருநாள் சொன்னார். ராத்திரி பூஜைக்கு என்னை மட்டும் அறைக்குள் அனுப்பினார். என் உடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக உட்காரவைத்து, என் உடல் முழுவதும் திருநீற்றைப் பூசினார் சித்தர். பிறகு, தீர்த்தம் கொடுத்தார். அதைக் குடித்ததும் அரை மயக்கமாகி விட்டேன். என்னைப் படுக்கவைத்து சித்தர் எனக்குள் கலந்தார். அதை என்னால் உணர முடிந்தது. ஆனால், கத்த முடியவில்லை. பூஜை முடிந்து வெளியில் வந்து நான் என் அம்மாவிடம் இதைச் சொல்லி அழுதேன். ஆனால், ராத்திரி பூஜைன்னா அப்படித்தான்... இதையெல்லாம் பெருசுபடுத்தாதே!’ என்று சொல்லிவிட்டார்.
அதன்பிறகு அடிக்கடி அந்தச் சாமியாரிடம் என்னை என் அம்மா அனுப்புவார். வேறு வழியில்லாமல் நானும் 'ராத்திரி பூஜை’க்குச் செல்வேன். ஒரு நாள் அந்தச் சாமியார், என்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். பகல் நேரத்தில் கடைக்குள் வைத்தே குமார் என் மீது கைவைத்தான். தடுத்தேன். என்னை அடித்தான். நான் அழுது அடம்பிடித்தேன். குமார் எனக்கு ஒரு ஊசி போட்டான். நான் மயக்கமானதும் அந்த மிருகம் பட்டப்பகலில் கடைக் குள் வைத்தே என்னை வேட்டை யாடியது.
குமாரோட வீட்டுக்கு என்னை கொண்டுபோனாங்க. அங்கே அவரோட மனைவி ஜெயாவும் அவருடைய தோழி லதாவும் இருந்தாங்க. அவங்ககிட்ட குமார், 'இவளைத் தொழிலுக்கு பழக்கியாச்சு. கொஞ்சம் அடம்பிடிப்பா. அடிங்க... இல்லைன்னா மாத்திரை போட்டு அனுப்புங்க’னு சொன்னான். அதுக்கப்புறம் தினமும் எனக்கு மாத்திரையைப் போட்டு நாலு பேருகிட்ட அனுப்புவாளுங்க. ஒருநாள் ராத்திரி 11 மணி இருக்கும் குமாரோட நண்பர்கள் ஆறு பேர் என்னை ஒரு கார்ல மெரீனா பீச்சுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. என்னைக் கடற்கரை ஓரத்துல படுக்கவெச்சு ஆறு பேரும் விடியவிடிய நாசமாக்கினாங்க. கத்துறதுக்குகூட என் உடம்பில் தெம்பு இல்லை.
ஒருநாள் அதிகாலை குமார் வீட்டுல எல்லோரும் தூங்கிட்டு இருக்கும்போது நான் அங்கிருந்து தப்பினேன். திருப்பதி வந்தேன். அங்கே மாங்காய் வாங்கி வியாபாரம் செஞ்சேன். அங்கேதான் போலீஸ் என்னை விசாரிச்சாங்க. என்னை மீண்டும் என் அம்மாவுடன் அனுப்பாதீர்கள். என்னைக் காப்பாற்றுங்கள்...'' என்று போகிறது அந்தக் கொடுமையான வாக்குமூலம்.
சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தமிழக போலீஸுக்கு வந்த இந்த விவகாரம் டி.ஜி.பி.ராமனுஜத்தின் கவனத்துக்குப் போனது. அவர் நேரடியாக விசாரித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கடந்த 15-ம் தேதி அறவழிச் சித்தரையும், சிறுமியின் தாய் வசந்தியையும் கைதுசெய்தனர். குமார், அவருடைய மனைவி ஜெயா மற்றும் லதா உள்ளிட்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அறவழிச் சித்தரின் வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது. அந்த வீட்டு உரிமையாளரின் மகன் சுனிலிடம் பேசினோம். ''15 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் அறவழி சித்தர் வாடகைக்கு குடியேறினார். பெண்கள்தான் அதிக அளவில் குறி கேட்க வருவார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், குறி கேட்கவந்த சிறுமியை சாமியார் கற்பழித்துவிட்டதாக பிரச்னை கிளம்பியது. அப்போதே நாங்கள் வீட்டைக் காலி செய்யச் சொன்னோம். ஆனால், அவர் போகவில்லை. அதன் பிறகு எங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காததால் நாங்களும் விட்டுவிட்டோம்'' என்றார்.
அப்பாவிப் பெண்களை விபசாரத்தில் தள்ளும் இந்த நெட்வொர்க் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment